Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: மதுரை டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த மணிகண்ட பிரபுவிற்கும் காளீஸ்வரிக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மணிகண்டபிரபு குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், காளீஸ்வரிக்கும் வெயில்முத்து என்பவருக்கும், கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வெயில்முத்து வீட்டார் காளீஸ்வரியுடன் தகராறு செய்து தனது மகனை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், வெயில்முத்து இறந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும், காவல் நிலையத்தில் காளீஸ்வரி நேரில் சென்று, தன்னுடன் தங்கியிருந்த வெயில் முத்து தன்னோடு சண்டையிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் காளீஸ்வரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வெயில் முத்து கடந்த சில நாட்களாக தன் மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி குடிபோதையில் வந்து தகராறு செய்ததாகவும், இதே போல் கடந்த 17-ம் தேதி குடிபோதையில் வந்து தகராறு செய்த போது வெயில் முத்துவை கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு மயங்கியதாகவும், மயங்கிய நிலையில் இருந்த வெயில் முத்து எழுந்து வந்தால் தன்னை கொலை செய்து விடுவார் என அஞ்சி வெயில் முத்துவை துண்டால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு கட்டிலில் படுக்க வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சரியாக எரியாததால் வெயில்முத்து உடலை வெளியே இழுத்து வந்து குப்பையில் போட்டு எரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் காளீஸ்வரி. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.